
மேகதாது அணை: தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு விளக்கம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் கர்நாடகாவிற்கு தேவையில்லை என மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.
2018 பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நீர் தீர்ப்பில், அணை கட்டுவதற்கு பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி விளக்கினார்.










