இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான 'மஞ்சணத்தி' படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த க்ளிம்ஸ் மற்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படைப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.