
கொழும்பில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குடிநீர் தகராறில், 17 வயது பள்ளி வீரர் தாக்கியதில் 62 வயது பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோ உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய அந்த மாணவர் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 17 வரை சிறுவர் சீர்திருத்தக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மறைந்த சுமித் பெர்னாண்டோ, இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.