
பயணிகளின் வசதிக்காக எழும்பூர்-கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 4 முதல் 25 வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து எழும்பூருக்கு செப்டம்பர் 6 முதல் 27 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை-தாம்பரம் இடையே வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.