
திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் அரசுப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவியர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி அறக்கட்டளை சார்பில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தேர்ச்சி பெற்றவர்களில் 9 பேர் மறுமுறை தேர்வு எழுதியவர்கள் என்றும், ஒருவர் மட்டுமே முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.