
காங்கோவின் மாம்பசா மாகாணத்தில் உள்ள பனனா எகலி கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதிகள் வீடுகளைச் சூறையாடி பணம் மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்ளையடித்ததோடு, வீடுகளுக்குத் தீ வைத்தும் தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.