
தமிழக அரசு 2036-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக ‘அறிவகம்’ உருவாக்கப்படும், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 5 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறைக்கு 4,414 கோடி ரூபாயும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2,142 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.