
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாகவோ அல்லது வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்ததாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என முதல்வர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாகவோ அல்லது செலவு கணக்கில் முறைகேடு செய்ததாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் முதல்வர் விஜய் தனது மனுவில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.