
ஏர்பஸ் விமான கொள்முதல் ஊழல் வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2013-ம் ஆண்டு 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில், 8 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சமாக நாமல் ராஜபக்சேவுக்கு கைமாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு நீதிமன்றம் நாமல் ராஜபக்சேவை வரும் 18-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.