
சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று காலை 11:16 மற்றும் 11:34 மணிக்கு என வெறும் 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கங்கள் 10 கிலோமீட்டர் ஆழத்தில் முறையே 5.7 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை மாகாணமான கான்சுவில் உள்ள லான்சூ நகரிலும் உணரப்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.