
பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை வலியுறுத்தும் சர்வதேச நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச்சபை 2017-ம் ஆண்டு நிறைவேற்றிய 72/165 தீர்மானத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்ய இந்த நாள் உருவாக்கப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை உலக அளவில் முன்னெடுத்து, அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை இந்த தினம் வலியுறுத்துகிறது.