
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் போலியான தள்ளுபடி விலை மற்றும் மறைமுக கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் வருகிற 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கும்போது கடந்த 30 நாட்களில் விற்பனை செய்யப்பட்ட குறைந்தபட்ச விலையையும் சேர்த்து தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
ஆன்லைன் தளங்கள் தேடல் முடிவுகளில் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு நியாயமற்ற முன்னுரிமை அளிப்பதைக் கட்டுப்படுத்தவும், ஆண்டுதோறும் சுய தணிக்கை செய்து சான்றிதழ் அளிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.