
கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுமார் 15 பில்லியன் டாலர், அதாவது ரூ.1.38 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை கொள்முதல் செய்துள்ளது.
டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலத்தில் ரூ.42,506 கோடிக்கு மட்டுமே எண்ணெய் வாங்கிய நிலையில், தற்போது கொள்முதல் பல மடங்காக அதிகரித்துள்ளது.
டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயிலேயே பணம் செலுத்துவதால், இந்தியாவுக்கு அந்நிய செலாவணி மிச்சமாகிறது மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளை சமாளிக்க இது உதவுகிறது.