
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி தம்புலாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரை கைப்பற்ற இலங்கையும், தொடரை சமன் செய்ய பாகிஸ்தானும் நாளை களமிறங்க உள்ளதால் ஆட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.