ஜவஹர்லால் நேரு உயரிய அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், ஸ்மார்ட்போன் மூலம் அல்சைமர் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் ADxFluor தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
TZ-48 என்ற மூலக்கூறு மூளையில் உள்ள நச்சு புரதக் கட்டிகளுடன் இணையும் போது வெளிப்படும் ஒளியை, ஸ்மார்ட்போன் செயலி மூலம் துல்லியமாக அளவிட முடியும்.
இந்தியாவில் 2030-க்குள் 76 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குறைந்த செலவிலான பரிசோதனை முறை கிராமப்புற மக்களுக்கு பெரிதும் உதவும்.