
திரைப்பட முன்பணம் 40 லட்சம் ரூபாயைத் திருப்பித் தராதது தொடர்பான வழக்கில், முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தயாரிப்பாளர் சரவணன் அளித்த புகாரின் பேரில், பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ராஜ்கிரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2022-ம் ஆண்டு நடந்த ஒப்பந்தம் தொடர்பாக நான்கு ஆண்டுகள் கழித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்கிரண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.