
நீதிபதி பூனம் சவுத்ரியை தொலைபேசியில் மிரட்டி ஜாமீன் பெற முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திஸ் ஹசாரி நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஆள்மாறாட்டம் மற்றும் மிரட்டல் குற்றங்களுக்காக இந்த தண்டனையை உறுதி செய்துள்ளது.
தலைமை குற்றவியல் நடுவர் ஹர்ஷிதா மிஸ்ரா, சுகேஷ் சந்திரசேகரின் கருணை மனுவை நிராகரித்து, தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்.