
திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் வீட்டில் கைப்பற்றப்பட்ட 118 ஆவணங்களை வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் கட்டுமான அனுமதி வழங்குவதில் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் முன்னாள் அமைச்சர் மகேஷ் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.