நொய்டாவைச் சேர்ந்த 45 வயதான பீனா குமாரி கங்க்வார், இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்து வந்த தனது தம்பி ஜிதேந்திர சிங் கங்க்வாருக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார்.
ShardaCare-HealthCity மருத்துவமனையில் டாக்டர் அனில் சர்மா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இருவரும் நலமாக குணமடைந்துள்ளனர்.
40 வயதான ஜிதேந்திரனுக்கு இந்த அறுவை சிகிச்சை புதிய வாழ்வை அளித்துள்ள நிலையில், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.