மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து புனித பூமியின் பள்ளிகளின் தலைவர் அருள்பணி இப்ராஹிம் ஃபால்டாஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் சாலைத் தடுப்புகளால் மக்கள் மருத்துவமனை மற்றும் பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை நிறுத்துமாறு திருத்தந்தை விடுக்கும் அழைப்புகளுக்கு உலக நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என்றும், வரவிருக்கும் தேர்தல்கள் அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.