
இந்திய தகவல் சேவை பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி சஞ்சய் கோஷ், சென்னை மண்டல திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் (சென்சார் போர்டு) மண்டல அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை புத்தக வெளியீட்டு பிரிவின் துணை இயக்குனராகவும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பிலும் சஞ்சய் கோஷ் பணியாற்றி வருகிறார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, அவர் தனது தற்போதைய பொறுப்புகளுடன் சேர்த்து இந்த புதிய பொறுப்பையும் கவனிப்பார்.