
சீனாவின் சோங்கிங் வனவிலங்கு பூங்காவில், பிறந்த சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளின் வேட்டையாடும் திறனை வளர்க்க பிரத்யேக 'மழலையர் பள்ளி' தொடங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர்கள் தள்ளுவண்டிகளில் குட்டிகளை அழைத்து வந்து, மனிதக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது போல புகைப்படங்கள் எடுத்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இங்குள்ள குட்டிகளுக்கு 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதோடு, அவை ஒன்றோடு ஒன்று பழகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.