
ரஜினிகாந்தின் 173-வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது குறித்து அவரது மனைவி குஷ்பு, இது மூவருக்கும் இடையே நடந்த விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி விலகியதைத் தொடர்ந்து, தற்போது 'தருமன்' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.
சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்ததை அடுத்து, கமல்ஹாசனிடம் அந்தத் தகவலைத் தான் தொலைபேசியில் தெரிவித்ததாக குஷ்பு கூறியுள்ளார்.