
கூகுள் பே செயலியில் 6,000 ரூபாய் வரை பரிசு கிடைப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி லிங்குகளைத் தொட வேண்டாம் என சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
அறிமுகம் இல்லாத நபர்கள் தவறுதலாகப் பணம் அனுப்பியதாகக் கூறி திருப்பி அனுப்பச் சொல்லும் மோசடிகளில் சிக்கி, UPI PIN-ஐ பகிர்ந்தால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்பட வாய்ப்புள்ளது.
சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.