
ஏமனின் மரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் ஹவுதி பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான மோதல் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில் இந்த வன்முறை அதிகரித்துள்ளது.