வங்கி லாக்கரில் இருந்து நகை திருடுபோனால், வங்கி அலட்சியம் அல்லது கொள்ளை போன்ற காரணங்களுக்கு மட்டுமே லாக்கர் வாடகையைப் போல 100 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்களால் லாக்கர் சேதமடைந்தால் வங்கி இழப்பீடு வழங்காது என்றும், லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பட்டியல் வங்கிக்குத் தெரியாது என்பதால் நகைகளுக்கு முழு காப்பீடு கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் நகைகளின் பில்கள் மற்றும் புகைப்படங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மதிப்புமிக்க நகைகளுக்குத் தனியாக இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.