
போதைப்பொருள் பழக்கத்தைத் தடுப்பதிலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா மாநாட்டில் காணொளி வாயிலாகப் பேசிய அவர், ஒலிம்பிக்கில் இந்தியா சிறந்து விளங்க பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
21-ம் நூற்றாண்டில் நவீன விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், கேலோ இந்தியா சம்வாத் இளைஞர்களின் யோசனைகளை உருவாக்கும் மேடை என்றும் அவர் கூறினார்.