
லெஸ்டரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், அயர்லாந்து நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 38.1 ஓவர்களில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து வீராங்கனை மையா பவுச்சியர் 104 ரன்களும், சோபியா டங்க்லி 73 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச இலக்கு என்ற புதிய சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி படைத்துள்ளது.