
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 19, 24, 36 வயதுடைய 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இது பயங்கரவாத செயல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த பெண்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.