
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
ஒரு படப்பிடிப்பின் போது, தான் அணிந்திருந்த சொந்த சட்டையை கழற்றச் சொல்லி சிபாரிசில் வந்த மற்றொருவருக்கு கொடுத்த சம்பவத்தால் தான் மிகவும் காயமடைந்ததாக சூரி பேட்டியளித்துள்ளார்.
விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய சூரி, தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன் போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில், மண்டாடி படம் தனது கரியரில் பெரிய வெற்றியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.