
8-வது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை விவாதிக்க, 2026 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முக்கிய நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
புதிய சம்பளக் கட்டமைப்பு மற்றும் இதர நிதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களுடன் இந்த ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டங்களின் மூலம் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.