
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கந்துவட்டி மாபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாக சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவொற்றியூரில் பிரதீப் என்ற இளைஞர் காவல் நிலைய வாசலிலேயே உதவி கேட்டும், ரவுடிகளால் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்வதுடன், ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அவர் முதல்-அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.