ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது பேபி பவுடரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு தொடர்பான வழக்குகளை முடிக்க ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
உலகளவில் நிறுவனம் மீது தொடரப்பட்ட சுமார் 69,000 வழக்குகளை தீர்ப்பதற்காக இந்த மிகப்பெரிய தொகையை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும், நிறுவனம் தனது தயாரிப்பு பாதுகாப்பு தரங்களை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.