
ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா எல்லையில் உள்ள கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 27 பேர் மாயமாகியுள்ள நிலையில், 77 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
90 பேர் மட்டுமே பயணிக்கும் திறன் கொண்ட அந்தப் படகில், 114 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.