
தவெக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு மக்கள் பணிகளைச் செய்யாமல், நாளொன்றுக்கு 4 ரீல்ஸ் எடுக்கும் மனநிலையிலேயே வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய உதயநிதி, தவெக ஆட்சியின் செயல்பாடுகளை ஒரு சர்க்கஸ் கம்பெனியுடன் ஒப்பிட்டு கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசு நிர்வாகத்தின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி, தவெக எம்.எல்.ஏ.க்களின் இத்தகைய செயல்கள் ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.