
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அட்டவணையை மாற்ற பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த போட்டிகளை, செப்டம்பர் 11, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளுக்கு மாற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த தொடரின் அட்டவணை மாற்றம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.