
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 420.57 புள்ளிகள் சரிந்து 76,094.86 புள்ளிகளில் வர்த்தகமானது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.90 புள்ளிகள் குறைந்து 23,767.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி ஐடி துறை அதிக சரிவைச் சந்தித்த நிலையில், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.