
சோமாலியா கடல் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பலில் பணிபுரிந்த 6 இந்தியர்களின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை, அவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.