
ஈரானுடனான பதற்றத்தைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், போர்க்கப்பல்களின் வருகை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பீதியை ஏற்படுத்தியுள்ளது.