
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த பரங்கிமலை காவல் ஆய்வாளர் புகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யானைகவுனி போலீஸார் நடத்திய விசாரணையில், ஆய்வாளர் புகாரி மற்றும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் புகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.