
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி கோரி, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி டெல்லியில் மத்திய நீர் ஆணைய தலைவரை சந்தித்தார்.
திட்டத்தின் திருத்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ள கர்நாடக அரசு, தொழில்நுட்ப ஆய்வுகளை விரைந்து முடித்து அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.
மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், கர்நாடக அரசு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.