
தமிழ்நாட்டில் 59 எம்.பி. தொகுதிகள் கிடைக்கும் என்ற அன்புமணி ராமதாஸின் கருத்துக்கு, தொகுதி மறுவரையறை மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது உத்தரப் பிரதேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள 41 இடங்கள் என்ற இடைவெளி, 50% இடங்கள் அதிகரித்தால் 61 இடங்களாக உயர்ந்து தமிழ்நாட்டின் குரல் பலவீனமடையும் என அவர் எச்சரித்துள்ளார்.
மக்களவையில் 33% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்திய அவர், எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஜனநாயகத்திற்குப் பலன் தராது என்று விமர்சித்துள்ளார்.