
இந்து சமய அறநிலையத்துறை மாநில அறங்காவலர் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி தனது சொந்தப் பணத்தில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளைச் செய்துள்ளதால், அவரது ஆன்மிகப் பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் தலைவராகவும், ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு, அனைத்து விதிகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளது.