
இந்தியாவின் ஹெச்.ஏ.எல் மற்றும் பிரான்சின் சேஃப்ரான் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ் நிறுவனங்கள் இணைந்து 'அரவல்லி' என்ற புதிய ஹெலிகாப்டர் என்ஜினைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
3,500 முதல் 4,000 ஷாஃப்ட் ஹார்ஸ்பவர் திறன் கொண்ட இந்த என்ஜின்கள், 13 டன் எடை கொண்ட இந்திய பன்முக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட உள்ளன.
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், ரஷ்ய தயாரிப்பு மி-17 ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இந்த உள்நாட்டு தயாரிப்பு என்ஜின்கள் பயன்படுத்தப்படவுள்ளன.