பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனையில் இருந்து மீண்டும் ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறைக்கு மாற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக இம்ரான் கானுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிறை மாற்றத்தின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க சிறை வளாகத்தைச் சுற்றி சுமார் 800 ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.