
காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ சுகாதாரத்துறை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.