
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹிகா சர்மாவுடன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக மொட்டை அடித்து புதிய தோற்றத்தில் வந்த பாண்டியா, சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
தரிசனம் முடித்த இருவருக்கும் தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில், அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.