
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு, மூச்சுதிணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபுக்கு, இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.