
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (33) என்பவர் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெடி விபத்து இன்று (05.09.2026) ஒத்தையால் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்துள்ளது.