
இந்தியப் பொறியாளர் அர்ஜூன் அருணாச்சலம் தனது வோக்சல்கிரிட்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் குறைந்த செலவிலான புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் இருக்க, அர்ஜூன் அருணாச்சலத்தின் நிறுவனத்திற்கு ரத்தன் டாடாவின் டாடா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளன.
தற்போது 47 வயதாகும் அர்ஜுன் அருணாச்சலம் தயாரித்துள்ள இந்த புதிய உள்நாட்டு கருவி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதற்கான கட்டணத்தை 70 சதவீதம் வரை குறைக்கும்.